நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளதா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026