நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் யாழ்ப்பாணத்தில் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 117 தொற்றாளர்களில் 26 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 21 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 19 பேர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களெனவும், 33 பேர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026