பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை -பொதுமக்களே அவதானம்

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை -பொதுமக்களே அவதானம்

திட்டமிட்ட குழுவொன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை கொள்ளையடித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மட்டும் மோட்டார் சைக்கிள் கொள்ளை தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

தமது மோட்டார் சைக்கிள்களை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.