அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்..!
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.