யாழில் தோட்டக்காணியை உழுதவேளை வெளிக்கிளம்பிய அபாயகரபொருட்கள்
யாழ்ப்பாணம் இளவாலை வடக்கில் இன்றையதினம் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்து பண்படுத்தும்போது நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் நாளையதினம் குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026