சற்றுமுன்னர் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சற்றுமுன்னர் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,231ஆக அதிகரித்துள்ளது.

குவைட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 223 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,996 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.