இலங்கை பெண்ணொருவர் குவைட்டில் மரணம்
குவைட் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றி வந்த இலங்கை பெண்ணொருவரை அவ்வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் இணைந்து தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலம் அந்நாட்டு அம்ரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.