வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம்: ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் பலி

வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம்: ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் பலி

அபுதாபியில் திடீர் தீ விபத்தொன்றில் சிக்கி ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இந்த நபர் பணிப்புரியும் இடத்தில் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துதுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.