சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவர் கைது

சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தேராவில் வனப்பிரதேசத்திற்குரிய வேணாவில் வனப்பகுதியில், சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்றையும் பெறுமதிவாய்ந்த முதிரை மரக் குற்றிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சான்றுப் பொருட்களுடன், சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில், இன்றைய தினம் முன்னிலைப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.