போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கல்லை காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 200 உடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை தங்கல்லை காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.