ஹோர்முஸ் நீரிணை அருகே விழுந்து நொருங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே நேற்று(09) திங்களன்று விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தியின் குழுவினர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. மேலும், உலங்கு வானூர்தி ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளானதா, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சிக்கலைச் சந்தித்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “விமானிகள் நலமாக உள்ளனர், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, நாளை அறிக்கை வெளியிடப்படும், ஆனால் விமானிகள் நலமாக உள்ளனர்” என்று கூறினார்.

பிராந்தியத்தில் பல நாட்களாக மாறி மாறி நிலவிய பதட்டமான சூழலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.