யாழில் "நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை" நிகழ்வு!
பெண்களின் எண்ணங்கள் 2026 என்னும் சிறப்பு நிகழ்வு JSAC நிறுவனத்தின் ஏறாட்டில் இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடைற்றது.
வடக்கு மாகாணப் பெண்களின் ஆற்றல், பேரார்வம் மற்றும் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபபத்தில் நடைற்ற இன்நிகழ்வின் தலைமை விருந்தினராக வடக்கு மாகாண நன்னடத்தை ஆணையாளர் திருமதி. சுஜீவ சிவதாஸ் கலந்து சிறப்பித்திருந்தார்.
அதேநேரம் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டி ஆலோசகர் குஞ்சிதபாதம் கௌதமன் மற்றும் யாழ். மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிரிதரன் தாயபாரி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
"நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை" என்னும் தலைப்பிம் சிறப்பு உரையை செல்வி. வைதேகி நரேந்திரன் நிகழ்த்தியிருந்தார்.