
அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் பெருமளவான சொகுசு வாகனங்கள்
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பெருமளவான சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் நீண்டகாலமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் கடந்த மார்ச் மாதம் மாதத்திற்கு முன் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனடிப்படையில், பெருமளவான சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு தற்போது துறைமுகத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், துறைமுகத்திலும் பெருமளவான வாகனங்கள் குவிந்து காணப்படுகின்றது.