நீதிமன்றில் அம்பலமான பொலிஸாரின் நாடகம் ; வெளியான பகீர் தகவல்

நீதிமன்றில் அம்பலமான பொலிஸாரின் நாடகம் ; வெளியான பகீர் தகவல்

வெலிகம W15 ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக தான் உள்ளிட்ட குழுவுக்கு அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வாவே உத்தரவிட்டதாக அந்த பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா நேற்று (11) தெரிவித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன் இன்று நான்காவது நாளாக முன்னிலையானார்.

நீதிமன்றில் அம்பலமான பொலிஸாரின் நாடகம் ; வெளியான பகீர் தகவல் | Police Cover Up Exposed In Weligama Shooting

அப்போது, ​​24ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட, தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட, கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வாவிடம் குழு விசாரணைகளை மேற்கொண்ட அன்ஸ்லம் டி சில்வா பின்வருமாறு கூறினார். 

"டிசம்பர் 30, 2023 அன்று, அப்போதைய கொழும்பு குற்றப் பிரிவின் பதில் பணிப்பாளர் நெவில் டி சில்வா, அதிகாரிகள் குழுவுடன் வெலிகமவுக்கு வந்து செல்லுமாறு என்னைக் கேட்டார். பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஒரு குழுவிற்கு அங்குள்ள ஒரு ஹோட்டலில் ஒரு விருந்து இருப்பதாகவும், அந்த இடத்திற்குச் சென்று சுவரிலும் ஹோட்டலின் பெயர் பொறிக்கப்பட்ட பலகையிலும் சுட வேண்டும் என்று கூறினார்.

அந்த நோக்கத்திற்காக வெளியே சென்ற குழுவின் தலைவராக நான் செயற்பட்டேன். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, நாங்கள் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்தோம். நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, ​​மற்றொரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பின்னர் எங்களுடன் வந்த உபுல் என்ற அதிகாரி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்துக் கிடந்தார்.

என்னுடன் இருந்தவர்களிடம் 'சீக்கிரம் புறப்படுங்கள்' என்று சொன்னேன். அங்கு ஒரு பேருந்தில் சுமார் 20 விசேட அதிரடிப் படையினர் இருந்தனர்.

அவர்களின் பேருந்து தாமதமாக புறப்பட்டதால் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். இல்லையெனில், உபுலுடன் சேர்ந்து நாங்களும் இறந்திருப்போம்.  என்று அவர் மேலும் கூறினார், தன்னையும் மற்ற பொலிஸ் அதிகாரிகளையும் தவறாக வழிநடத்தியதற்காக CCD பணிப்பாளரை அவர் குற்றம் சாட்டினார்.