யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கைதான 6 இந்திய மீனவர்கள்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் 23.01.2024 செவ்வாய்க்கிழமை இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026