தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Terror In The Tamil Area Couple Murder Vavuniyaசெட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன், வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம் (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Terror In The Tamil Area Couple Murder Vavuniyaஇந்நிலையில் இன்று (30) காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன், தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Terror In The Tamil Area Couple Murder Vavuniyaசம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் வயது72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.