நான்கு வருடங்களுக்கு பின்னர் பிடிபட்ட கொலையாளி.
மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தடியால் அடித்து நபரை கொன்று பருத்தி விவசாயி போல் மாறு வேடமணிந்து நான்கு வருடங்களாக தலைமறைவாக இருந்த ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக தெபுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெபுவன, கோட்டையாஹேன பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நான்கு வருடங்களுக்கு முன்னர் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருந்த போது நீதிமன்றத்தை தவிர்த்து வந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
