விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவனால் பரபரப்பு!

விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவனால் பரபரப்பு!

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பிரதான தமிழ் பாடசாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் (21) அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவனால் பரப்ரப்பு! | A Student Came To School After Drinking Poison

10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவரே விசம் அருந்திய நிலையில் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் தன்னையும் தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்த மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.

விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவனால் பரப்ரப்பு! | A Student Came To School After Drinking Poisonஇந்நிலையில் தோட்டத்தில் இருந்த பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்ததாக வட்டவளை வைத்தியசாலை வைத்தியர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்துவிட்டு மாணவன் பாடசாலைக்கு வந்ததாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதித்க்கிப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.