மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026