மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் பாரிய தீ விபத்து (காணொளி)

மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் பாரிய தீ விபத்து (காணொளி)

கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவத்தில் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.