மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்!

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துக்கான, நான்கு முனை கால்பந்தாட்டப் போட்டியின் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, இன்று இலங்கை வந்தடைந்தார்.

மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம்  புறப்பட்டு, இன்று (8) காலை 9.40 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.