வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி முடக்கம்
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.
இங்கு 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று (23) காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு, முற்றாக முடக்கப்பட்டது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)