யாழில் வாள்வெட்டு சம்பவம் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவ ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதை அடுத்து இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியவர் திருநெல்வேலியினைச் சேர்ந்தவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026