
12 மாவட்டங்களுக்கு 450,000 சைனோபாம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு
12 மாவட்டங்களில் முதியோர், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் அரச ஊழியர்களுக்காக 450,000 சைனோபாம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு நேற்றைய தினம் கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளிலிருந்து, இந்த 450,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தடுப்பூசியை விநியோகிக்கும் பணிகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.