பாஸ்டர் ஸ்டென்லி டோஸன் காலமானார்!
இலங்கை பெந்தேகொஸ்தே சபையின் உப தலைவரான பாஸ்டர் ஸ்டென்லி டோஸன் (Stanley Dawson) யாழ். சுண்டுக்குளியில் இன்று காலமானார்.
அன்னார் இலங்கையின் பல பகுதிகளில் முழு நேர ஊழியத்தில் ஈடுப்பட்டவராவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை நாளை மாலை 3 மணிக்கு சுண்டுக்குளியிலுள்ள இலங்கை பெந்தேகொஸ்தே சபைச்சாலையில் நடைபெற்று பின்னர் கொட்டடி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.