இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்
இலங்கையில் இன்றையதினம் 272 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் மூவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 269 பேர் முன்னைய தொற்றாளர்களுடன் நெருக்கமாக இருந்த உறவினர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது 6140 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் உள்ளதுடன் 5581 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.