ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 135 பேர் கைது
நாட்டில் தற்பொழுதுஅதிகரித்துள்ள கொவிட் 19 தொற்றினை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரையில் 37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.