ஜயருவன் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக நியமனம்..!
கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.
அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் 6484 பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.