ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 120 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.