தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 465 பேர் இன்று வீடு திரும்பல்!
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள 465 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 122 பேர் வெளியேற்றப்படவுள்ளதுடன் தனியார் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 343 பேர் வெளியேற்றப்படவுள்ளனர்.