பெருந்தோட்ட மக்களுக்கு தனி முகவரியை பெற்றுக்கொடுக்க செயற்படுவேன்- அ.அரவிந்தகுமார்
பெருந்தோட்ட மக்களுக்கு தனி முகவரியை பெற்றுக்கொடுக்க அதிக அக்கறையுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து அதன் அங்கிகாரத்தை பெற்று மலையக மக்களுக்கு உரிய உரிமையை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
பதுளை, எலதலுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.