சிறைக்குள் புதைக்கப்பட்ட பெருமளவான தொலைபேசிகள் மீட்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 19 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைக்குள் தொலைபேசிகள் எவ்வாறு வந்தன என்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.