லொறி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

லொறி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கண்டியில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது.

லொறி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Motorcycle Collides With Lorry

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.