காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்

காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

குருநாகல் (Kurunegala) - மில்லாவா பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்காக வீட்டை விட்டுச் சென்றிருந்த தொழிலதிபர், வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி டோரடியாவா காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தார்.

காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் | Death Body Found Inside The Car

பின்னர் காவல்துறையினர் விசாரணைக்காக குறித்த பெண்ணை அழைத்து வந்தபோது, ​​அந்த உடல் அவரது கணவருடையது என அடையாளம் கண்டனர்.

அதன்படி, குருநாகல் பொது மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியவில்லை எனவும் மேலும் இந்த சம்பவம் குறித்து மஹவ தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.