இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளளார்.

பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியைச் சேர்ந்த முத்தன் பிரேம் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 23ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.

பின்னர் உறவினர்கள் சடலத்தை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சடலம் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு | Young Family Man Commits Wrong Decision

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.