யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்

யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மனைவி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன், மனைவி ஆகிய இருவரும் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்துவருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம் | Drugs Husband Arrested In Jaffna Wife Abscondingஅதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரின் மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்த நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் கைதான கணவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.