நாளை மற்றும் நாளை மறுதினம் மதுபானசாலைகள் மூடப்படும்!
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது