யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 வயது யுவதி பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டது.
இதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026