யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்!
யாழ்ப்பாண பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதான முஹமட் ரஸ்லான் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026