இலங்கையில் 46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்: டொலர் பெறுமதி தொடர்பில் சபையில் அறிவிப்பு..!

இலங்கையில் 46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்: டொலர் பெறுமதி தொடர்பில் சபையில் அறிவிப்பு..!

46 வருடங்களின் பின் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் இன்றைய தினம் (06.03.2024) விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளது.

இலங்கையில் 46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்: டொலர் பெறுமதி தொடர்பில் சபையில் அறிவிப்பு | Usd Rate In Sri Lanka Today

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.