கல்முனையில் கரையொதுங்கிய திமிங்கில சுறா (படங்கள்)
கல்முனை, நிந்தவூர் கடற்கரையில் தரையிறங்கிய திமிங்கில சுறாவை இலங்கை கடற்படை மீட்டு மீண்டும் அதை கடலில் விடுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குறித்த சுறா சுமார் 3.5 மீற்றர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 9 ஆயிரம் கிலோகிராம் எடையும் 9 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த திமிங்கில சுறா வளரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சுறாவானது சுமார் 70 தொடக்கம் 100 ஆண்டுகள் வரையில் வாழும் ஆற்றல் கொண்டது என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் மாநாட்டுச் சட்டத்தின்படி (UNCLOS) குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பாதுகாக்கப்பட வேண்டிய மீன்கள் வகைகளில் இவ்வகை திமிங்கில சுறாவும் (Whale shark – Rhincodon typus)உள்ளடங்குவதால், இதை இலங்கையில் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026