நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்கள் விபரம்
நேற்றைய தினம் (21) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 800 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.
நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 3,547 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 9 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என அந்த நிலையம் தெரிவித்தது.
