சொந்த வாகனத்தில் பயணிக்கும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை!
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.