திருகோணமலையில் இன்றுகாலை மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

திருகோணமலையில் இன்றுகாலை மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார், 5ஆம் கட்டைப் பகுதியில் வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த கே.அந்தோனிசாமி (48 வயது) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்