போ எல்லே ஆற்றில் நீராட சென்ற இருவர் பலி!
மாவனெல்ல - போ எல்லே ஆற்றில் நீராட சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாகேஹேல்வல மற்றும் பிலிமத்தலாவ பகுதிகளை சேர்ந்த இருவரே மரணித்தனர்.
சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்