உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? சிறுநீரகத்தில் கற்களாம்! ஜாக்கிரதை

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? சிறுநீரகத்தில் கற்களாம்! ஜாக்கிரதை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரகப் பிரச்சினைகள் இருக்கின்றன. சரியாக தண்ணீர் குடிக்காமலும், உணவுப் பழக்கவழக்கங்கள் முறையாக இல்லாததாலும் சிறுநீர் கற்கள் உருவாகுகின்றன.

சிறுநீரகங்கள் மனிதனின் முதுகெலும்பிகளின் கீழ் இடதுபக்கத்திலும், வலது பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்துள்ள உறுப்பு.

இதில் வலது பக்க சிறுநீரகம் இடது பக்க சிறுநீரகத்திற்கு சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.

யூரியா போன்ற கழிவுப்பொருட்களைக் ரத்தத்திலிருந்து பிரித்து நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு தான் சிறுநீரகம்.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டு செல்கிறது.

சிறுநீர் சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி சிறுநீர் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு வந்து வெளியேறுகிறது.

கிரிஸ்டல் எனப்படும் உப்பு சிறுநீரில் இருக்கும். கிரிஸ்டல் உப்பில் கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் கலந்திருக்கும்.

இவை அனைத்தும் ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன. சிறுசீரகத்தில் கற்கள் பெரியளவில் வளர்ந்தால் அவை சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்கள் உருவத்தில் மாறுபட்டிருக்கும். சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

பெரிய கற்களாக இருந்தால் வலியை ஏற்படுத்தும். சிறுநீரில் சரளை கற்கள் இருந்தால் இவை மனிதனுக்கு வலியை ஏற்படுத்தாது.

சிறுநீரக கற்களின் அறிகுறிகள்

 

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் கலந்த வலி ஏற்படும்.

இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறும்போது துர்நாற்றம் வீசும்.

முதுகுப் பகுதியில் ஒரு பக்கத்தில் கடுமையான வலி ஏற்படும்.

சிறுநீரக பாதையில் சிறுநீர் கடந்து செல்லும்போது அடிவயிற்றில் தீராத வலி ஏற்படும்.

திடீரென்று வாந்தி, குமட்டல் ஏற்படும்.

அடிக்கடிக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல் உணர்வு இருக்கும்.

சிறுநீரக கற்கள் பெரியதாக இருந்தால் அவர்களால் அந்த வலியை தாங்கிக்கொள்ளவோ, படுக்கவோ, உட்காரவோ முடியாது.

சிறுநீரக கற்களிலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனைகள்

சிறுநீரக பிரச்சினை வந்தால் முதலில் டாக்டரிடம் செல்வது அவசியம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறையாவது இளநீர் குடிக்க வேண்டும்.

அகத்தி கீரையை வேக வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

வாழைத்தண்டை சாறு, முள்ளங்கி சாறு தினமும் குடித்து வரலாம்.

உணவுப் பழக்கத்தில் கீரைகள், பழங்கள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஊறுகாய், கருவாடு, வற்றல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

மற்ற இறைச்சியை காட்டிலும், கடல் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

அவரைக்காய், பீன்ஸ் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளவும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எந்த அளவுக்கு வலியை கொடுக்கும் என்று… எனவே, நாம் நம் உடம்பையும், உயிரையும் பேணிக் காக்க வேண்டும்.