
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..!
இலங்கை அல்லது எந்த ஒரு நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது நிதி கொடுப்பனவை கோரும் தனி நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, இலங்கைக்கு வரும் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உரிய அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களைத் தவிர வேறு எந்தவொரு தனி நபருக்கும் நிறுவனத்திற்கும் வழங்கவில்லை என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையினால் நாட்டிற்கு மீள அழைத்து வரும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி எதிர்வரும் வாரங்களில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் உண்மையான மற்றும் மேலதிக தகவல்களை அருகிலுள்ள இலங்கை தூதரகம் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டு அமைச்சு கோரியுள்ளது.
அல்லது தங்களது பிரச்சினைகளை https://www.contactsrilanka.mfa.gov.lk/ என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து பதிவு செய்யுமாறு வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.