ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பூஜித் ஜயசுந்தர..!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பூஜித் ஜயசுந்தர..!

சாட்சியம் வழங்குவதற்காக கட்டாய விடுமுறையில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று மீண்டும் முன்னிலையானார்.

அவர் ஏழாவது முறையாகவும் குறித்த ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகியது

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ஹேமசிறி பெர்ணாடோவும் சாட்சியம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.