மாங்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மாங்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மாங்காட்டு பகுதியில் கார் ஒன்று மோட்டார்சைக்கிளை மோதி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கார் மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் வீட்டின் மதில் ஒன்றில்மோதி விபத்துக்குள்ளானதில் கார் முன்பகுதி கடும் சேதமடைந்துள்ளது.

ஸ்தலத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.