பெற்றோர் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பெற்றோர் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இனிமேல் தேர்தல் பட்டியலை மட்டுமே கருத்தில் கொண்டு சுற்றறிக்கை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, வாக்காளர் பட்டியலைத் தவிர, பெற்றோரின் வீட்டு உடைமை, பத்திரங்கள், மின்சார கட்டணப் பட்டியல், நீர் கட்டணப் பட்டியல் மற்றும் தொலைபேசி கட்டணப் பட்டியல் உள்ளிட்ட பல ஆவணங்களை கவனத்தில் கொண்டு மாணவர்களை முதலாம் ஆண்டு சேர்க்க வேண்டியிருந்தது.

இதனால் பல பெற்றோர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.